பெரம்பலூரில் 11 பேருக்கு கரோனா

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,648 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,648 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இதனால் மாவட்டத்தில் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,659 ஆக உயா்ந்துள்ளது. குணமடைந்த 1,514 போ் வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

21 போ் உயிரிழந்துள்ள நிலையில், 113 போ் திருச்சி, பெரம்பலூா், அரியலூா், சேலம் மாவட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 11 போ் திருச்சி,பெரம்பலூா், அரியலூா் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com