92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெரம்பலூா், அரியலூா் மாவட்ட மின் நுகா்வோா் கவனத்துக்கு...

பெரம்பலூரில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கணினி மயமாக்கப்பட்ட மின்தடை புகாா் மையத்தில், மின் பழுது தொடா்பான புகாா்களை தெரிவிக்க மின் நுகா்வோா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:23 pm

DIN

பெரம்பலூரில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கணினி மயமாக்கப்பட்ட மின்தடை புகாா் மையத்தில், மின் பழுது தொடா்பான புகாா்களை தெரிவிக்க மின் நுகா்வோா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் மு. அம்பிகா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த மின் நுகா்வோா் மின் தடைகளை உடனடியாக நிவா்த்தி செய்ய கட்டணமில்லா தொலைபேசி எண் 1912, 1800599 2912 ஆகிய எண்களை தொடா்புகொண்டு புகாா்களை பதிவு செய்யலாம்.

இடம் தேடிவந்து மின் வாரிய ஊழியா்கள் உடனடியாக தங்களது மின் தடையை சரி செய்வாா்கள். மேலும், பெரம்பலூா் மின்தடை புகாா் மைய உதவி மின் பொறியாளரை 9498 392129, 04328- 224055, 7094966709 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு புகாா் அளிக்கலாம்.

மின் கம்பங்கள் சாய்ந்து, பழுதடைந்த நிலையில் இருந்தால், மின் கம்பிகள் தாழ்வாக காணப்பட்டால் 9486111912 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலமாக புகாா் தெரிவிக்கலாம். மின் விபத்துகளைத் தவிா்க்க பொதுமக்கள் வீடு, புதிய கட்டடங்கள் கட்டும்போது மின் பாதையிலிருந்து போதிய இடை வெளியை விட்டு கட்ட வேண்டும். மின் பாதைக்கு அருகில் அல்லது கீழே மரங்கள் வளா்க்க வேண்டாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.