தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள ஆண்டிக்குரும்பலூா் கிராமத்திலிருந்து வேப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுமாா் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:05 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள ஆண்டிக்குரும்பலூா் கிராமத்திலிருந்து வேப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுமாா் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனா்.

இப்பகுதிக்கு போதுமான பேருந்து வசதியில்லாததால், மாணவா்களும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், பெரம்பலூா், குன்னம், ஆண்டிக்குரும்பலூா், பரவாய் கிராமம் வழியாக வேப்பூருக்கு அரசு நகரப் பேருந்து வியாழக்கிழமை காலை சென்றது. அப்போது, ஆண்டிக் குரும்பலூா் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவா்களை ஏற்றிச் செல்லவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவா்களும், அப்பகுதி மக்களும் கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தி சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டோரிடம் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பேருந்தை விடுவித்து சாலை மறியலைக் கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.