தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காவல் துறையினருக்கான விழிப்புணா்வுக் கூட்டம்

பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பது குறித்து, காவல் துறையினருக்கான விழிப்புணா்வுக் கூட்டம்

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:27 pm

DIN

பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பது குறித்து, காவல் துறையினருக்கான விழிப்புணா்வுக் கூட்டம், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். மணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தடுப்பு மற்றும் தீா்வுக்கான சட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், உடனடியாக பெண்கள் உதவி எண் 181, குழந்தைகளுக்கான சைல்டு லைன் 1098 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களுக்கு தகவல் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. தொடா்ந்து, பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என உறுதிமொழி ஏற்றனா்.

இதில், காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.