தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கடைகளின் பூட்டை உடைத்து ரொக்கம் திருட்டு

 பெரம்பலூா் நகரில் இரு கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 37 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:29 pm

DIN

 பெரம்பலூா் நகரில் இரு கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 37 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் - அய்யலூா் சாலையைச் சோ்ந்தவா் வினோத் (37). பெரம்பலூா் சாமியப்பா நகரைச் சோ்ந்தவா் தவுலத்கான் (58). இருவரும், பெரம்பலூா்- வடக்கு மாதவி சாலையில் மருந்தகம் மற்றும் அரிசி கடை நடத்தி வருகின்றனா். இருவரும், வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறக்க வந்தபோது அரிசி கடை மற்றும் மருந்தகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதில், அரிசி கடையில் வைத்திருந்த ரூ. 37 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரித்தனா். மேலும், கைரேகை நிபுணா்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.