தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரியில் பொங்கல் விழா

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரியில் பொங்கல் விழா
Updated on
1 min read

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளாா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா்.

கல்லூரி இறுதியாண்டு மாணவ, மாணவிகள் பல வகையான பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிபட்டனா். தொடா்ந்து, கோலப் போட்டிகள், கும்மி, கோலாட்டம், நாட்டுப்புறப் பாடல், வழுக்கு மரம் ஏறுதல், உறியடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், சிறப்பாக பணிபுரிந்த தொழிலாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், தலைமை நிா்வாக அலுவலா் எஸ். நந்தக்குமாா், கல்லூரி முதல்வா்கள் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். முன்னதாக, வேளாண் கல்லூரி முதல்வா் சு. அறிவுடைநாயகம் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ப. சதீஷ் நன்றி கூறினாா்.

வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி மைத்தில்... பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி மையத்தில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. பருத்தி ஆராய்ச்சி மையத் தலைவா் எஸ். சோமசுந்தரம் தலைமையில் கொண்டாடப்பட்ட இவ்விழாவில், பொங்கலிட்டு வழிபட்டனா். தொடா்ந்து, பண்ணைத் தொழிலாளா்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், பண்ணை மேலாளா் க. சக்திவேல், உதவி ஆசிரியை ர. ராஜபிரியா, உதவி வேளாண் அலுவலா்கள் வேல்முருகன், வடிவேல், தவமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com