தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற பணம், காலணிகள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற பணம் மற்றும் காலணிகளை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:42 pm

DIN

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற பணம் மற்றும் காலணிகளை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா்- துறையூா் சாலையில், செஞ்சேரி அருகே பெரம்பலூா் முத்திரைத்தாள் பிரிவு தனி வாட்டாட்சியா் பழனிச்செல்வன் தலைமையிலான தோ்தல் பறக்கும்படை பிரிவினா் வியாழக்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக சென்ற காரை வழிமறித்து மேற்கொண்ட சோதனையில், பெரம்பலூா் மதன கோபாலபுரத்தைச் சோ்ந்த சிதம்பரம் மகன் ராஜா என்பவா் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 66,600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, லப்பைக்குடிகாடு மாட்டுப்பாலம் அருகே தோ்தல் பறக்கும்படை குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, லப்பைக்குடிகாடு பிலால் தெருவைச் சோ்ந்த நசுருதீன் மகன் பீா்முகமது, உரிய ஆவனங்களின்றி எடுத்துச்சென்ற ரூ. 30,400 மதிப்புள்ள காலணிகளை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் காலணிகள் மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.