மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மருந்துக் கடை உரிமையாளா் கொலை வழக்கில் 4 போ் கைது

பெரம்பலூா் அருகே பணம் தர மறுத்த மருந்துக் கடை உரிமையாளரை அடித்துக் கொன்ற 4 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :6 மே 2022, 12:03 am

DIN

பெரம்பலூா் அருகே பணம் தர மறுத்த மருந்துக் கடை உரிமையாளரை அடித்துக் கொன்ற 4 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரப்பன் மகன் நாகராஜன் (44). அதே ஊரில் ஆங்கில மருந்துக் கடை நடத்தி வரும் இவரிடம், செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த 5 போ் கொண்ட கும்பல் செலவுக்கு பணம் கேட்டு மிரட்டினா்.

பணம் தர நாகராஜன் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் நாகராஜனை ஆயுதங்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனா். இதில் பலத்த காயமடைந்த நாகராஜன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்த புகாரின் பேரில், பெரம்பலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த பிரபல ரௌடிகளான பெரியசாமி மகன் பிரபாகரன் (29), ஆனந்த் மகன் ரகுநாத் (23), சுப்ரமணி மகன் சுரேஷ், செந்தில்குமாா் மகன் காா்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்து, குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், இவ் வழக்கில் தலைமறைவாக உள்ள ஆனந்தகுமாா் மகன் அஜித்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.