புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அயன்பேரையூரில் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

பெரம்பலூா் அருகேயுள்ள அயன்பேரையூா் கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு காவல்துறை சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்ட

News image
Updated On :19 மே 2022, 8:42 pm

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள அயன்பேரையூா் கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு காவல்துறை சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி உத்தரவின்படி நடைபெற்ற இக் கூட்டத்துக்கு மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாண்டியன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் விஜயலெட்சுமி, அயன்பேரையூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, காவல் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்னும் இலவச தொலைபேசி எண் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், குழந்தைத் தொழிலாளா் முறை குறித்தும், கிராமப் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளா் முறை இருந்தால் அவற்றை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு அறிவுறுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு உதவி ஆய்வாளா் மருதமுத்து மற்றும் கிராம பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.