பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி உத்தரவின்படி நடைபெற்ற இக் கூட்டத்துக்கு மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாண்டியன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் விஜயலெட்சுமி, அயன்பேரையூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, காவல் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்னும் இலவச தொலைபேசி எண் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.