இந்நிலையில், இப் பூங்காவை அறிவியல் பூங்காவாக மாற்றுவதற்கானத் திட்டம் தொடங்கப்பட்டு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் முதல்கட்டமாக ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சேதமடைந்த நடைபாதைகள், விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்கப்பட்டன. மேலும், மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, தமிழக அரசின் அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் பங்களிப்புடன், அன்றாடம் நம் வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள அறிவியல் தத்துவத்தைப் பயன்படுத்தி இயங்கும் வகையில் பல்வேறு உபகரணங்கள் அமைக்கப்பட்டன.