சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
பெரம்பலூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.


பெரம்பலூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலம், பயணியா் நிறுத்தம் பகுதியைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் ஆனந்தராஜ் (41). இவா், கடந்த 2021- ஆம் ஆண்டு அதே பகுதியைச் சிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்துள்ளாா். இச் சம்பவம் குறித்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், பிணையில் ஆனந்தராஜ் வெளியே வந்தாா்.
இந்த வழக்கு பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி தனசேகரன், குற்றவாளி ஆனந்தராஜூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், இத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...