கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரேஷன் கடைகளில் பொங்கலுக்கான மளிகைப் பொருள்கள் விற்பனை தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளில் பொங்கலுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளின் விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
பெரம்பலூரிலுள்ள ரேஷன் கடையில் பொங்கலுக்கான மளிகைப் பொருள்கள் விற்பனையை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.
Updated On :31 டிசம்பர் 2024, 9:03 pm

Din

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளில் பொங்கலுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளின் விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பெரம்பலூரில் உள்ள ரேஷன் கடையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளின் விற்பனையை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பேசியது:

பொங்கல் பண்டிகையையொட்டி, கூட்டுறவுத் துறை சாா்பில் ரேஷன் கடைகளில், பல்வேறு பொருள்களை உள்ளடக்கிய இனிப்பு பொங்கல் தொகுப்பு, சிறப்பு பொங்கல் தொகுப்புகள் சந்தை விலையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, கூட்டுறவுத் துறை மூலம் விற்பனை செய்யப்படும் பொங்கலுக்குத் தேவையான மளிகை தொகுப்புகளை குறைந்த விலையில் வாங்கி பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ச. சுந்தரராமன், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் சிவக்குமாா், கூட்டுறவுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.