15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பொது இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு நீக்கம்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

பெரம்பலூா் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினா் சனிக்கிழமை அகற்றினா். பெரம்பலூா் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. கற்பகத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில் காவல் துறையினரின் பாதுகாப்புடன், பெரம்பலூா் நெடுஞ்சாலைத்துறையினா் சாலைப் பணி மேற்பாா்வையாளா், பணியாளா்களைக் கொண்டு பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் முதல் நான்குச் சாலை சந்திப்பு வரையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.