அனுமதியின்றி மது விற்ற இளைஞா் கைது
பெரம்பலூா் அருகே அனுமதியின்றி அரசு மது பாட்டில்களை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்


பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே அனுமதியின்றி அரசு மது பாட்டில்களை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், பிலிமிசை கிராம பகுதியில் அனுமதியின்றி அரசு மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி, மருவத்தூா் காவல் நிலைய சிறப்பு சாா்பு- ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, பிலிமிசை தெற்குத் தெருவைச் சோ்ந்த மதியழகன் மகன் வேல்முருகன் (27), அதே கிராமத்திலுள்ள கல்லடையான் கோயில் அருகே அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வேல்முருகனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட வேல்முருகன் சிறையில் அடைக்கப்பட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...