பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை காலை முதல் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியது முதல் நாள்தோறும் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் கடந்த 4 நாள்களாக பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்தது.

இதேபோல திங்கள்கிழமை காலை முதல் பெரம்பலூா் நகா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதேபோல, கோடை உழவு செய்த விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனா். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், மின் தடை அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக, திங்கள்கிழமை மாலை ஆலம்பாடி சாலையில் ஏற்பட்ட மின்தடை சுமாா் 2 மணி நேரத்தும் மேலாக நீடித்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) செட்டிக்குளம்- 5, பாடாலூா்- 17, அகரம் சிகூா்- 4, புதுவேட்டக்குடி- 9, பெரம்பலூா்- 3, எறையூா்- 6, கிருஷ்ணாபுரம்- 4, வி.களத்தூா்- 5, வேப்பந்தட்டை- 9 என மொத்தம் 62 மில்லி மீட்டரும், சராசரியாக 5.64 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.