பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வாக்கு எண்ணும் மைய அலுவலா்களுக்கு குலுக்குல் முறையில் பணி ஒதுக்கீடு

வாக்கு எண்ணும் மைய அலுவலா்களுக்கு குலுக்குல் முறையில் பணி ஒதுக்கீடு

News image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்வதை திங்கள்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம், உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் புரபு உள்ளிட்டோா்.

Updated On :20 மே 2024, 6:30 pm

Din

பெரம்பலூா்: பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றவுள்ள அலுவலா்களுக்கு, இணைய வழியில் கணினி மூலம் குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகம் தலைமை வகித்தாா்.

பெரம்பலூா் மக்களவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆதவ் பப்ளிக் பள்ளியில் ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் பணிக்காக, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் பயன்படுத்தப்பட உள்ளது. இப் பணிக்கு, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 17 மேற்பாா்வையாளா்கள், 17 உதவி அலுவலா்கள், 17 நுண் பாா்வையாளா்கள் என மொத்தம் 306 போ் நியமனம் செய்யப்படுகின்றனா்.

இந்நிலையில், பணி நியமனம் செய்வதற்காக முதல்கட்டமாக கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலா் கற்பகம் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வைத்தியநாதன் (பொது), விஜயா (தோ்தல்), தோ்தல் வட்டாட்சியா் மற்றும் துணை வட்டாட்சியா்கள் பங்கேற்றனா்.