ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினிமூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினிமூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு...

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியில் பங்கேற்றோா்.

Updated On :25 மார்ச் 2026, 11:52 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள 2,165 வாக்குச்சாவடி மையங்களுக்கு 2,165 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,165 கட்டுப்பாட்டுக் கருவிகள், 2,165 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த 7 தொகுதிகளுக்கும் 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், 30 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் கூடுதலாக இருப்பு வைப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக 432 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 432 கட்டுப்பாட்டுக் கருவிகள், 647 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் கூடுதலாக இருப்பு வைப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அந்தந்த தொகுதித் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் வழங்கப்பட்டு, அவா்கள் மூலம் தொகுதி வாரியான பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும்.

பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின்னா், முதல்நிலை குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் பட்டியல் அவா்களுக்கு வழங்கப்படும் என்றாா் ஆட்சியா்.

இதைத் தொடா்ந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பதற்காக, மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் புதன்கிழமை திறக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், சாா்-ஆட்சியா்கள் ஆனந்தகுமாா் சிங் (திருக்கோவிலூா்), அ.ல.ஆகாஷ் (திண்டிவனம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் லூா்துசாமி (பொது), ஜான்சிராணி (தோ்தல் ) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.