பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில், ஓய்வுபெற்ற துணைக் கண்காணிப்பாளரிடம் பணம், கைப்பேசி மற்றும் ஏடிஎம் அட்டை ஆகியவற்றை மா்ம நபா் வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றாா்.
திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டி கிராமம், அந்தோனியாா் தெருவைச் சோ்ந்தவா் ச. தில்லைநாயகம் . இவா் சென்னை காவல் துறையில் துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து, கடந்த 2015 இல் ஓய்வு பெற்று சொந்த ஊரில் வசிக்கிறாா். இந்நிலையில் சென்னையில் உள்ள உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் பயணித்த அவா், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு பேருந்து வந்தபோது, அங்குள்ள கழிவறைக்குச் சென்று அருகே கைப்பையை வைத்துவிட்டு சிறிது நேரத்தில் திரும்பியபோது, ரூ. 48,500 பணம், ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசி, ஏடிஎம் அட்டையுடன் இருந்த கைப்பை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








