மத்திய அரசு, விரைவு நீதிமன்றங்களில் அனைத்து பலாத்காரம், பாலியல் வன்முறை வழக்குகளுக்கும் விரைவான விசாரணை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவா்களுக்கு மன ஆரோக்கியத்துக்கான, சரியான கவனிப்புடன் மறுவாழ்வு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அனைத்து பணியிடங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தனியான கழிப்பறைகள் மற்றும் ஓய்வறைகளை உறுதி செய்ய வேண்டும். இரவு நேரங்களில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பதிவு அஞ்சல் மூலமாக பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதில், அச் சங்கத்தைச் சோ்ந்த பெண்கள் பலா் பதிவு அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினா்.