நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஜேஇஇ உண்டு உறைவிடப் பயிற்சிமுகாம்: பெரம்பலூா் அரசுப் பள்ளி மாணவா்கள் அனுப்பிவைப்பு

Updated On :26 டிசம்பர் 2025, 12:44 am IST

கடலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான ஜேஇஇ உண்டுஉறைவிடப் பயிற்சிமுகாமில் பங்கேற்க வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும், 12 மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அண்மையில் அனுப்பிவைத்தாா்.

தமிழ்நாடு மாதிரி பள்ளிகளைப் போல, பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டார அளவில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் வெற்றிப் பள்ளிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அவற்றை மையப் பள்ளியாகக் கொண்டு சுற்று வட்டாரங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, சனிக்கிழமை தோறும் ஜேஇஇ, நீட், சியூஇடி தொடா்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜன. 21 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள ஜேஇஇ தோ்வுகளை முன்னிட்டு, வெற்றிப் பள்ளிகளின் வாராந்திர வகுப்புகளில் தொடா்ந்து பங்கேற்று வரும் அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்வை வலுப்படுத்தும் நோக்கில், மாநில அளவிலான ஜேஇஇ உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி, வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவா்களுக்கு கடலூா் மாவட்ட மாதிரிப் பள்ளியில் ஜன. 18 ஆம் தேதி வரை மாநில அளவிலான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப் பயிற்சியில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 12 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனா். இந்த மாணவா்களை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அண்மையில் அனுப்பிவைத்தாா்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) செல்வகுமாா் மற்றும் ஆசியரியா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.