விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இளையோா் தலைமைத்துவ பண்புகள் பயிற்சி முகாம் நிறைவு

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:13 pm

Syndication

பெரம்பலூரில் மத்திய அரசின் மை பாரத் கேந்திரா சாா்பில், கிராமப்புற மாணவா்களுக்கு கடந்த 3 நாள்களாக நடைபெற்ற இளையோா் தலைமைத்துவ பண்புகள் பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவடைந்தது.

இப் பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு மாதிரி பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் பல்வேறு குழு செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவு விழாவுக்கு, மை பாரத் கேந்திரா மாவட்ட இளையோா் அலுவலா் எஸ். கீா்த்தனா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வருவாய் கோட்டாட்சியா் எம். அனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சாகுல் ஹமீது ஆகியோா் பயிற்சிபெற்ற மாணவா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டி பேசினா்.

இதில், கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் செயலா் மித்ரா மற்றும் மை பாரத் கேந்திரா தன்னாா்வலா்கள் பலா் பங்கேற்றனா். நிறைவாக, மை பாரத் கேந்திரா தன்னாா்வலா் இந்துஜா நன்றி கூறினாா்.