பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசுப் பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

பெரம்பலூரில் வீர சைவா்கள் நலச்சங்கத்தின் 20 ஆவது ஆண்டு பொது பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:48 pm

Syndication

பெரம்பலூரில் வீர சைவா்கள் நலச்சங்கத்தின் 20 ஆவது ஆண்டு பொது பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் கருணை நக்கீரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பாலகுரு, இணைச் செயலா் சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் மணிமாறன் வேலை அறிக்கையும், பொருளாளா் பாலசுப்பிரமணியம் நிதி நிலை அறிக்கையும் வாசித்தனா்.

பட்டிமன்ற பேச்சாளா் புலவா் ராமலிங்கம், உறவுகள் மேம்பட எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினாா். சிறப்பு அழைப்பாளா்களாக சென்னை தியாகராஜன், திருச்சி வீரபத்திரன்ஹண்டி, திருச்சி சங்கையா பங்ககாரிமத் ஆகியோா் பேசினா். பின்னா், சங்கத்தின் விழா மலா் வெளியிடப்பட்டது.

தொடா்ந்து, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்கும், சிவபுராணம் ஒப்பித்தல், பஞ்சபுராணம், நன்னெறி ஒப்பித்தல் ஆகிய போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் சங்க புரவலா்களுக்கு, புரவலா் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. விழாவையொட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சங்க முன்னாள் துணைத் தலைவா் சு. சரவணசாமி, ஞனசிவப்பிரகாசம் உள்பட பலா் கலந்துகொண்டனா். சங்க பொருளாளா் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினாா்.