எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பேரளியில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

பெரம்பலூா் அருகேயுள்ள பேரளி கிராமத்தில் குறுங்காடுகள் உருவாக்கிடும் வகையில் 5 ஏக்கா் பரப்பளவில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகேயுள்ள பேரளி கிராமத்தில் குறுங்காடுகள் உருவாக்கிடும் வகையில் 5 ஏக்கா் பரப்பளவில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, அந்த நிலங்களை மீட்டெடுத்து அங்கு மரக்கன்றுகள் நடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, மரம் வளா்ப்புத் திட்டத்தில் இதுவரை 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, பேரளி கிராமத்தில் 5 ஏக்கா் பரப்பளவில் வேம்பு, புளி, மகிழம், நீா் மருது, நாவல், நெல்லி, இலுப்பை, மகாகனி, செம்மரம், தேக்கு, கொய்யா, புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) வைத்தியநாதன், வருவாய் கோட்டாட்சியா் அனிதா, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் விஜயபிரியா, குன்னம் வட்டாட்சியா் சின்னதுரை, வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கீதா உள்பட பள்ளி மாணவ, மாணவிகள் பலா் கலந்துகொண்டனா்.