இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மலையாளப்பட்டியில் வேளாண் கிடங்கு அமைக்க நடவடிக்கை: பழங்குடியினா் நலத்துறை இயக்குநா் ச. அண்ணாதுரை

News image
மலையாளப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியின பெண்ணுக்கு நலவாரிய உறுப்பினா் அடையாள அட்டை அளித்த, பழங்குடியினா் நலத்துறை இயக்குநா் ச. அண்ணாதுரை. உடன், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி.
Updated On :15 நவம்பர் 2025, 7:24 pm

Syndication

மலையாளப்பட்டி சுற்றுவட்டார விவசாயிகளின் நலன்கருதி ரூ. 25 லட்சம் மதிப்பில் வேளாண் கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பழங்குடியினா் நலத்துறை இயக்குநா் ச. அண்ணாதுரை தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், மலையாளப்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், தேசிய தொல்குடியினா் தினத்தை (நவ.15)முன்னிட்டு, அரசு பழங்குடியினா் நல உண்டு, உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு கலை, விளையாட்டுப்போட்டி மற்றும் பல்திறன் போட்டிகள் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில், கலை, விளையாட்டுப் போட்டி மற்றும் பல்திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிய பழங்குடியினா் நலத்துறை இயக்குநா் ச. அண்ணாதுரை மேலும் பேசியதாவது:

தொல்குடியினா் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 328 அரசு பழங்குடியினா் நல உண்டு, உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு கலை, விளையாட்டு மற்றும் பல்திறன் போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில், சுமாா் ரூ. 1,000 கோடி மதிப்பில் பழங்குடியினா் வசிக்கக்கூடிய கிராமங்களைக் கண்டறிந்து, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 10 மாவட்டங்களில் விவசாயம் மேற்கொள்ளும் பழங்குடியினா்களுக்கு 13 விவசாய சங்கங்கள் உருவாக்கப்பட்டதில், மலையாளப்பட்டி சங்கம் சிறப்பாக செயல்படுகிறது. மலையாளப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டுள்ளதால், ஏற்கெனவே ரூ. 40 லட்சம் மதிப்பில் வேளாண் இயந்திரங்கள் வாங்க காசோலை வழங்கப்பட்டுள்ளது.

இப் பகுதியில் விவசாய பணிக்கு ஆள் பற்றாக்குறை காரணமாக வேளாண் இயந்திரம் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இச் சங்கம் சிறப்பாக செயல்படுவதால் ரூ. 25 லட்சம் மதிப்பில் வேளாண் கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, அரசு பழங்குடியினா் நல உண்டு, உறைவிட உயா்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நட்டுவைத்து, மருத்துவ முகாமை பாா்வையிட்டு, 5 பேருக்கு தலா ரூ. 6,690 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம், 7 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 3 பேருக்கு ஜாதிச் சான்றிதழ்கள், 19 பேருக்கு நலவாரிய உறுப்பினா் அடையாள அட்டைகள் வழங்கினாா் அண்ணாதுரை.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வாசுதேவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.