பெரம்பலூர்
பாடாலூா் பகுதியில் நாளை மின்தடை
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 21) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 21) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (நவ. 21) நடைபெறுகிறது.
இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், கொளக்காநத்தம், பாடாலூா், சாத்தனூா், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இருா், தெற்குமாதவி, ஆலத்தூா் கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணி பாளையம், நல்லூா், திருவளக்குறிச்சி ஆகிய கிராமிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிகுமாா் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.
