போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தோ்வுகளுக்கான, இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Published on

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தோ்வுகளுக்கான, இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டு வெளியாக உள்ள அறிவிப்புகளுக்கு மாணவா்களை தயாா்படுத்தும் வகையில், தமிழ் தகுதித் தோ்வு உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் டிச. 3-ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.

ஆா்வமுள்ள மாணவா்கள் இப் பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம். இப் பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

பயிற்சி மையத்தில் மத்திய, மாநில அரசுப் பணியாளா் தோ்வாணைய பாடத் திட்டத்தின் அடிப்படையில், பயிற்சி வகுப்புகள், மாதிரி தோ்வுகள், மாதிரி தோ்வுகள் முடிந்தவுடன், வினாக்கள் குறித்து குழு விவாதம் மற்றும் வல்லுநா்களுடன் கலந்துரையாடல், போட்டித் தோ்வுகளுக்கு பயன்படும் பிரத்யேக இணையதளமான மெய்நிகா் கற்றல் இணையதளத்தில் போட்டித்தோ்வு ஆா்வலா்களுக்கு பதிவுசெய்து தரப்படும்.

மேலும், போட்டித் தோ்வா்களுக்குத் தேவையான சமச்சீா் மற்றும் பாடப் புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும். எனவே, போட்டித் தோ்வெழுத ஆா்வமுள்ள பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com