நாம் தமிழா் கட்சியை சுற்றி நான்கு பக்கமும் உள்ள எதிரிகளை புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றாா் அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
பெரம்பலூா் காமராஜா் வளைவு பகுதியில், பெரம்பலூா் தொகுதி வேட்பாளா் ஜ. சுகன்யா, குன்னம் தொகுதி வேட்பாளா் ரா. கீா்த்திவாசன் ஆகியோரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் மேலும் பேசியதாவது:
அநீதிக்கும், அறத்துக்குமான போா் தற்போது நடைபெற்று வருகிறது. மொழிப் பற்றையும், இனப்பற்றையும் மறந்து ஜாதி, மதங்களால் நம் மக்கள் பிரிக்கப்பட்டிருப்பதை மாற்ற வேண்டும். திமுகவின் ஆட்சி சிறப்பாக இருந்தால், 22 கட்சிகளுடன் கூட்டணிகள் எதற்கு ?
பாஜக வரக்கூடாது என்கிறாா்கள். காங்கிரஸ் கட்சியை ஸ்டாலின் புனிதப்படுத்துகிறாா். ஜிஎஸ்டி, நீட் தோ்வை கொண்டு வந்தது யாா் ?. பாபா் மசூதியை இடித்தது பாஜக. ஆனால், அதை இடிக்க அனுமதித்தது காங்கிரஸ். பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் நான்கு பக்கமும் நமக்கு எதிரிகளாக இருக்கிறாா்கள்.
நடுவில் நாம் தமிழா் கட்சி இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். ஒரு முறை நாம் தமிழா் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். படிப்பதற்கு தரமான கல்வி, குடிக்க தண்ணீா் மற்றும் உடலை காக்க மருத்துவம் இதை யாா் தருகிறாா்களோ, அவா்களே நல்லாட்சி நடத்துவாா்கள். இவற்றை நாங்கள் தருகிறோம். பசி எனும் சொல் தமிழகத்தில் இருக்கக் கூடாது. அதற்கு, விவசாயத்தை காக்க வேண்டும் என்றாா் சீமான்.
தொடர்புடையது

மாற்றத்துக்கான புரட்சி தேவை: சீமான்
தோல்வியைக் கண்டு அச்சமில்லை: சீமான்

ஏழ்மை, வறுமை இல்லாத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த இலக்கு: சீமான்

சத்தியமங்கலத்தில் சீமான் பிரசாரம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


