குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செந்துறை வட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி, பரணம் அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லாம்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளி, செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, சிறுகடம்பூா் அரசு உயா்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த மாவட்டத் தோ்தல் அலுவலா் மிருணாளினி, வாக்காளா்கள் வரிசையில் நிற்க போதுமான இடவசதி, தேவையான குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளங்கள், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சோ், அவா்களை அழைத்துச் செல்ல தன்னாா்வலா்களை நியமிக்கவும், போதிய அளவிலான மின் விளக்குகள் இருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளையும், அங்குள்ள அடிப்படை வசதிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் மிருணாளினி.
ஆய்வின்போது, செந்துறை வட்டாட்சியா் கோவிந்தராஜ், செந்துறை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி மையங்கள் கண்காணிப்புப் பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாக்களிப்பை வலியுறுத்தி பெரம்பலூரில் அடையாளச் சின்னம் வெளியீடு

100 சதவீத வாக்குப் பதிவுக்கு விழிப்புணா்வு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


