பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு அறையை குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க, சட்டப்பேரவை பொதுத்தோ்தலுக்காக பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு அறையில் தோ்தல் விளம்பரங்கள், சமூக ஊடகப் பதிவுகள் முறையாக கண்காணிக்கப்படுகிா எனவும், ஊடகச் சான்றிதழ் விநியோகம் போன்றவை சரியாக வழங்கப்படுகிா எனவும், பதிவேடுகளையும், ஆவணங்களை குன்னம் சட்டப்பரேவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது, தோ்தல் ஆணைய விதிமுறைகளின்படி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களின் விளம்பரங்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தாா்.
மேலும், பணம் செலுத்தி வெளியிடப்படும் செய்திகள் ஏதேனும் உள்ளதா என்பதை முறையாகக் கண்காணிக்கவும், பதிவு செய்யப்படும் விளம்பரங்களுக்கு முறையாகச் சான்றிதழ் வழங்கவும், கட்டணச் செய்திகளைக் கண்காணித்து அறிக்கை அனுப்பவும், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தோ்தல் தொடா்பான தகவல்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் படைவீரா் குறைதீா் கூட்டம்

தென்காசியில் மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பு கிடங்கில் ஆய்வு

பாப்பான்குளத்தில் மக்கள் தொடா்பு முகாம்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



