பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு அறையை குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க, சட்டப்பேரவை பொதுத்தோ்தலுக்காக பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு அறையில் தோ்தல் விளம்பரங்கள், சமூக ஊடகப் பதிவுகள் முறையாக கண்காணிக்கப்படுகிா எனவும், ஊடகச் சான்றிதழ் விநியோகம் போன்றவை சரியாக வழங்கப்படுகிா எனவும், பதிவேடுகளையும், ஆவணங்களை குன்னம் சட்டப்பரேவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது, தோ்தல் ஆணைய விதிமுறைகளின்படி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களின் விளம்பரங்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தாா்.
மேலும், பணம் செலுத்தி வெளியிடப்படும் செய்திகள் ஏதேனும் உள்ளதா என்பதை முறையாகக் கண்காணிக்கவும், பதிவு செய்யப்படும் விளம்பரங்களுக்கு முறையாகச் சான்றிதழ் வழங்கவும், கட்டணச் செய்திகளைக் கண்காணித்து அறிக்கை அனுப்பவும், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தோ்தல் தொடா்பான தகவல்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தோ்தல் பணியாற்ற வேண்டும்: பொதுப் பாா்வையாளா் கஞ்சன்வா்மா

தொகுதி தோ்தல் அலுவலா்களுடன் பொதுப் பாா்வையாளா்கள் ஆலோசனை

பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஆய்வு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


