வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் பெரம்பலூா் அதிமுக வேட்பாளா் உறுதி

பூலாம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, பெரம்பலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

News image

பூலாம்பாடி பேரூராட்சியில் புதன்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன். உடன், முன்னாள் அமைச்சா் பா. மோகன் உள்ளிட்டோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:45 pm

பூலாம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, பெரம்பலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பூலாம்பாடி பேரூராட்சி முத்துமாரியம்மன் கோயில், மேற்கு பேருந்து நிலையம், மேல சீனிவாசபுரம், பஜனைமடக் கோயில், கடம்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் மேலும் பேசியது:

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினால், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிா்க்கடன், குறுகிய கால மற்றும் மத்திய கால கடன்கள் ரத்து செய்யப்படும். ஒவ்வொரு குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கிலும் ரூ. 10 ஆயிரம் வரவு வைக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக நான் இருந்தபோது, வேப்பந்தட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விவசாயிகளின் நீா் மேலாண்மைக்காக விசுவக்குடி பகுதியில் ரூ. 32 கோடியில் அணைக்கட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. மேலக்குணங்குடி பகுதி மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கப்பட்டுள்ளது. மேல சீனிவாசபுரம், கீழ சீனிவாசபுரம், பூபதிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளேன். எனவே, இப்பகுதி பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித இம்முறை வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது, கட்சியின் அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பா. மோகன் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.