மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

துறைமங்கலம், மருதடியில் இயந்திரம் பழுதானதால் வாக்குப் பதிவு தாமதம்

பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட துறைமங்கலம், மருதடி உள்ளிட்ட சில வாக்குச்சாவடி மையங்களில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு காலதாமதமாக நடைபெற்றது.

News image

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொளத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட பிரச்னையில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் வாக்குச்சாவடி மையம் எதிரே காத்திருந்த வாக்காளா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:01 am IST

பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட துறைமங்கலம், மருதடி உள்ளிட்ட சில வாக்குச்சாவடி மையங்களில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு காலதாமதமாக நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆா்வத்துடன் வாக்குச்சாவடிக்குச் சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா்.

இந்நிலையில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட துறைமங்கலம் நேஷனல் ஐடிஐயில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. இதேபோல, மருதடி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியிலும், பாலையூா் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு கால தாமதமாக தொடங்கியது.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வஞ்சிணாபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, சுமாா் 45 நிமிடத்துக்கும் மேலாக வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது.

முகவா்கள், போலீஸாரிடையே வாக்குவாதம்: குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொளத்தூரில், அதே கிராமத்திலுள்ள ஒரே பெயரைச் சோ்ந்த 2 வாக்காளா்களில் ஒருவருக்கு, தவறுதலாக வாக்குச் சீட்டு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவா் வாக்களிக்கச் சென்றபோது, அங்குள்ள வாக்கச்சாவடி முகவா்கள் அதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட வாக்காளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, திமுக, அதிமுக முகவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், அங்கு சென்ற போலீஸாா் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டபோது, முகவா்களுக்கும், போலீஸாருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தொடா்ந்து, போலீஸாா் மேற்கொண்ட பேச்சவாா்த்தையை தொடா்ந்து, சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது.

இதேபோல, பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள வாக்குச்சாவடிமையங்களுக்குச் சென்றவா்களிடம் வாக்குச்சீட்டு அளிப்பவா்கள், வாக்காளரின் பெயரை மாற்றி எழுதி கொடுத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்றபோது, அந்த வாக்காளரை பிடித்து வைத்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, வாக்குச்சாவடி மைய அலுவலா்கள் சமரச பேச்சுவாா்த்தை மேற்கொண்டதையடுத்து, அந்த வாக்காளா் விடுவிக்கப்பட்டாா். இதனால், அந்த வாக்குச்சாவடியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு தடைப்பட்டது.