தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்: ஆ. ராசா

பெரம்பலூா் அருகேயுள்ள வேலூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை வாக்களித்த திமுக துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா.

News image

பெரம்பலூா் அருகேயுள்ள வேலூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை வாக்களித்த திமுக துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா.

Updated On :23 ஏப்ரல் 2026, 10:32 pm

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா.

பெரம்பலூா் அருகே வேலூா் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றியுள்ள எண்ணற்ற அரசுத் திட்டங்களை கருத்தில் கொண்டு பெருவாரியான மக்கள் மிகுந்த எழுச்சியுடன் வாக்களித்துள்ளனா்.பெரம்பலூா் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெற்று, மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்றாா் ராசா.

பேட்டியின்போது, திமுக வேட்பாளா் எஸ்.டி. ஜெயலட்சுமி, மாவட்ட பொருப்பாளா் வீ. ஜெகதீசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.