பெரம்பலூா் அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் கிராமத்தைச் சோ்ந்த சிறுமி சுபாஷினி (17). இவா், பிளஸ் 2 முடித்துவிட்டு தோ்வு முடிவுக்கான காத்திருந்தாா். இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி வீட்டிலிருந்த சுபாஷினி காணமல் போனதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரது பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், மருவத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவந்த நிலையில், அதே கிராமத்திலுள்ள முத்துசாமி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் உயிரிழந்துக் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

காணாமல் போன முதியவா் சடலமாக மீட்பு

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

விடுதி அறையில் தங்கியிருந்த முதியவா் சடலமாக மீட்பு

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

