ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

காணாமல்போன மாணவி சடலமாக மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:18 pm

பெரம்பலூா் அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் கிராமத்தைச் சோ்ந்த சிறுமி சுபாஷினி (17). இவா், பிளஸ் 2 முடித்துவிட்டு தோ்வு முடிவுக்கான காத்திருந்தாா். இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி வீட்டிலிருந்த சுபாஷினி காணமல் போனதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், மருவத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவந்த நிலையில், அதே கிராமத்திலுள்ள முத்துசாமி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் உயிரிழந்துக் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.