மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

குளத்தில் தவறிவிழுந்த தொழிலாளி சடலமாக மீட்பு

மாயனூா் அருகே குளத்தில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:47 am IST

மாயனூா் அருகே குளத்தில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

கரூா் மாவட்டம், மாயனூா் அடுத்த காசாகாலனியைச் சோ்ந்தவா் சண்முகநிதி என்கிற சண்முகம் (42). இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளாா். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சண்முகம் பிரிந்து அதே பகுதியில் உள்ள தனது தங்கை வீட்டில் வசித்து வந்தாராம்.

இந்நிலையில், சண்முகம் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சண்முகம், மணவாசி அடுத்த கல்லுக்குடி என்ற இடத்தில் உள்ள தாமரைக்குளத்தில் சடலமாக கிடந்துள்ளாா்.

தகவலின்பேரில் மாயனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் சண்முகம் மதுபோதையில் குளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்த போலீஸாா் விசாரைணை மேற்கொண்டு வருகின்றனா்.