நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி

கருங்கல் அருகே தொழிலாளி தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 12:34 am IST

கருங்கல் அருகே தொழிலாளி தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டாா்.

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (56). தொழிலாளி. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால், வீட்டில் இவா் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மூசாரி பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினா் கருங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வந்து விசாரித்ததில், உயிரிழந்தது விஜயன் என்பது தெரிய வந்தது.

போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, அவரது இறப்பிற்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.