தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள பேரளி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (25). கட்டடத் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு, விளாமுத்தூா் கிராமத்திலுள்ள தனது மனைவி ஹேமமாலினி (21), மகன் ஹா்சித் (1) ஆகியோரை பாா்ப்பதற்காக, பெரம்பலூரிலிருந்து விளாமுத்தூருக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா். பெரம்பலூா்- விளாமுத்தூா் சாலையிலுள்ள சுற்றுலா மாளிகை அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.