சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

போதைப் பொருள்கள் கடத்திய காா் கவிழ்ந்து விபத்து

News image
Updated On :4 ஜனவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை போதைப் பொருள்கள் கடத்திச் சென்ற காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

பெரம்பலூா் அருகே உள்ள நொச்சியம் கிராமத்திலிருந்து அரணாரை செல்லும் வழியில், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை காா் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து காா் ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினாா்.

இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் காரில் என்ன உள்ளது என்று பாா்த்தனா். அப்போது அந்த காரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்களில் சிலா் அந்த புகையிலை பொருள்களை எடுத்துச்சென்று விட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு, காரில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.