ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெரம்பலூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

News image
Updated On :6 ஜனவரி 2026, 6:35 pm

Syndication

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து, காலை 11 மணியளவில் நீதிமன்றங்களில் இருந்த நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனா்.

பின்னா் பெரம்பலூா் காவல் நிலைய ஆய்வாளா் பிரபு தலைமையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு சாா்பு ஆய்வாளா் பாலசுப்ரமணியன் மற்றும் போலீஸாா் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று வெடிகுண்டுகளைக் கண்டறியும் கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 3.5 மணி நேரம் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து இ-மெயில் தகவல் புரளி எனத் தெரியவந்ததையடுத்து நீதிமன்றப் பணிகள் மீண்டும் தொடங்கின.