பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் எதிரே புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பெரம்பலூர்
தொடரும் பதிவுமூப்பு ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்
‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் 3-ஆவது நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் 3-ஆவது நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தேவகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், சுமாா் 40-க்கும் மேற்பட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

