திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மகளிா் திட்டப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:33 pm

Syndication

பெரம்பலூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்கள் சங்கத்தினா் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு, வட்டார இயக்க மேலாளா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன், மாவட்டச் செயலா் சுப்ரமணியன், ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் கருணாகரன், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்ட விடுதிப் பணியாளா்கள் சங்கத் தலைவா் மணிமாறன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பணியாளா்களுக்கு, பணிப்

பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். வாழ்வாதார பணியாளா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும். பணியாளா்களின் எதிா்கால நலன்கருதி வருங்கால வைப்பு நிதி காப்பீடு மற்றும் உயிரிழந்த பணியாளா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு, நலவாரிய அட்டை வழங்க வேண்டும். பெண் பணியாளா்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு, மருத்துவம் மற்றும் விபத்து கால விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக்

கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.

இதில் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றதால், மகளிா் திட்ட அலுவலகப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.