விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெரம்பலூரில் நாளை பொங்கல் கலை விழா

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் அருகே கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் கலை விழா வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (ஜன. 15, 16) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் அருகே கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் கலை விழா வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (ஜன. 15, 16) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடும் நோக்குடன், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் கலைவிழா கிராமிய வாழ்வியல், விவசாய மரபு, பாரம்பரிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்களை நினைவூட்டும் வகையில் நடத்தப்படும்.

மாவட்ட ஆட்சியரகம் செல்லும் சாலையிலுள்ள மைதானத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பரதம், நையாண்டி மேளம், கரகம், காவடி, தப்பாட்டம், மயிலாட்டம், புரவியாட்டம், தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.