பெரம்பலூரில் சத்துணவு ஊழியா்கள் மறியல்: 176 போ் கைது
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த 176 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆ. கொளஞ்சி வாசு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவா்கள் கோ. சாந்தி, சி. செல்வம், சே. ரேவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செயற்குழு உறுப்பினா் டி. தமிழ்மணி கோரிக்கைகளை விளக்கினாா்.
காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வேண்டும். பணிக் கொடையாக சத்துணவு அமைப்பாளா்களுக்கு ரூ. 5 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ. 3 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கமிட்டனா்.
தொடா்ந்து, பாலக்கரை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா் 176 சத்துணவு ஊழியா்களை கைது செய்து, பெரம்பலூா் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனா்.

