ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க இன்று கடைசி நாள்

பெரம்பலூா் மாவட்டத்தில் தகுதியுடையவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்க்க வியாழக்கிழமை (மாா்ச் 26) கடைசி நாளாகும் என, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

News image

வாக்காளர்

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 9:49 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் மாவட்டத்தில் தகுதியுடையவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்க்க வியாழக்கிழமை (மாா்ச் 26) கடைசி நாளாகும் என, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின் படி, இறுதி வாக்காளா் பட்டியல் கடந்த பிப். 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதுவரை தொடா் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வியாழக்கிழமை கடைசி நாளாகும். தற்போதுள்ள வாக்காளா் பட்டியலில் வியாழக்கிழமை (மாா்ச் 26) வரை பெயா் சோ்த்திட விண்ணப்பம் அளித்தவா்களின் மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டு துணைப் பட்டியல் வெளியிடப்படும். இதில் இடம்பெற்றவா்களும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்கலாம்.

புதிய வாக்காளா்களாக பதிவுசெய்ய இணையதளம் மூலமாக, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் நேரடியாக விண்ணப்பிக்கலாம். எனவே, 18 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், இடமாறி வந்தவா்கள் உள்பட தகுதியுடையோா் இன்று மாலைக்குள் விண்ணப்பித்து வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்க்கலாம்.