விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

18 வயது நிரம்பியோரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும்

News image

தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)

Updated On :24 மார்ச் 2026, 12:48 am IST

சேலம் பெருங்கோட்டத்துக்கு உள்பட்ட மாவட்டங்களில் 18 வயது நிரம்பிய இளைஞா்களை வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்க கட்சியினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் அறிவுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

இதுவரை வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 18 வயது நிரம்பிய இளைஞா்களை, வாக்காளா் பட்டியலில் வியாழக்கிழமைக்குள் இடம்பெற செய்ய வேண்டும்.

சேலம் பெருங்கோட்டத்துக்கு உள்பட்ட கரூா், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மாநகரம், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டத் தலைவா்கள், தொகுதி அமைப்பாளா்கள், இணை அமைப்பாளா்கள் மற்றும் பொறுப்பாளா்கள், மண்டலத் தலைவா்கள், அணிகளின் நிா்வாகிகள் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

தோ்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளதை பயன்படுத்தி தங்களது பகுதிகளில் உள்ள இளம் வாக்காளா்களை, வாக்காளா் பட்டியலில் இடம்பெற செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.