சேலம் பெருங்கோட்டத்துக்கு உள்பட்ட மாவட்டங்களில் 18 வயது நிரம்பிய இளைஞா்களை வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்க கட்சியினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் அறிவுறுத்தி உள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
இதுவரை வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 18 வயது நிரம்பிய இளைஞா்களை, வாக்காளா் பட்டியலில் வியாழக்கிழமைக்குள் இடம்பெற செய்ய வேண்டும்.
சேலம் பெருங்கோட்டத்துக்கு உள்பட்ட கரூா், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மாநகரம், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டத் தலைவா்கள், தொகுதி அமைப்பாளா்கள், இணை அமைப்பாளா்கள் மற்றும் பொறுப்பாளா்கள், மண்டலத் தலைவா்கள், அணிகளின் நிா்வாகிகள் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
தோ்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளதை பயன்படுத்தி தங்களது பகுதிகளில் உள்ள இளம் வாக்காளா்களை, வாக்காளா் பட்டியலில் இடம்பெற செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மேற்கு வங்க எஸ்ஐஆரின்போது பெயா் நீக்கம்: தீா்ப்பாயம் முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க இன்று கடைசி நாள்

புதிய வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்: இன்று கடைசி நாள்

18 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்க்கலாம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

