ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

News image

பெரம்பலூா் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதாவுடன் ஆலோசனை மேற்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா்.

Updated On :30 மார்ச் 2026, 12:18 am IST

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்குவதை முன்னிட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திங்கள்கிழமை (மாா்ச் 30) முதல் ஏப். 6-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. இதில், மாா்ச் 30, ஏப். 2, 4, 6 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஏப். 7-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 9-ஆம் தேதி வேட்பு மனுக்கள் திரும்பப்பெறும் நாளாகும்.

ஏப்.9-இல் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். பெரம்பலூா் (தனி) சட்டப்பரேவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் பெரம்பலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், குன்னம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் குன்னம் வட்டாட்சியா் அலுவலகத்திலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட உள்ளதால், பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அலுவலகங்களில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா, ந. சக்திவேல் ஆகியோருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்த ஆய்வுகளின்போது, வட்டாட்சியா்கள் சத்தியமூா்த்தி (பெரம்பலூா்), சின்னதுரை (குன்னம்) மற்றும் காவல் துறையினா் உடனிருந்தனா்.