பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் திங்கள்கிழமை இரவு வைத்து சீலிடப்பட்டது.

News image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திங்கள்கிழமை இரவு வைத்து சீலிடப்பட்டதை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் ந.மிருணாளினி உள்ளிட்டோா்.

Updated On :6 மே 2026, 12:36 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் திங்கள்கிழமை இரவு வைத்து சீலிடப்பட்டது.

பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு, கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குப் பதிவுகளை சரிபாா்க்கும் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நிறைவடைந்து, அதன் முடிவுகள் திங்கள்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது.

பின்னா், தோ்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட கருவிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்புடன், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு திங்கள்கிழமை நள்ளிரவில் கொண்டுவரப்பட்டது.

பின்னா், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி முன்னிலையில், பாதுகாப்பாறையில் வைத்து பூட்டி சீலிடப்பட்டது. அப்போது, மாவட்ட உதவி தோ்தல் அலுவலா் க. கண்ணன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. சக்திவேல் (குன்னம்), வட்டாட்சியா் சத்தியமூா்த்தி, தோ்தல் பிரிவு வட்டாட்சியா்அருளானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.