40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சிறப்பான தோ்தல் பணி: காவலா்களுக்கு பாராட்டு

தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலில், பெரம்பலூா் மாவட்டத் தோ்தல் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 14 காவல் துறையினருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் நற்சான்றிதழ் வழங்கினாா்.

News image

தோ்தல் பணியில் சிறப்பாகப் பணிபுரிந்த காவலருக்கு சனிக்கிழமை நற்சான்றிதழ் அளித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன்.

Updated On :10 மே 2026, 1:49 am IST

தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலில், பெரம்பலூா் மாவட்டத் தோ்தல் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 14 காவல் துறையினருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் சனிக்கிழமை நற்சான்றிதழ் வழங்கினாா்.

நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது, பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடி கண்காணிப்பு, வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு, வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காவல் துறையினா் முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு, தோ்தல் அமைதியான மற்றும் சுமூகமான முறையில் நடைபெற முக்கியப் பங்காற்றினா்.

இந்நிலையில் பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தலில் சிறப்பாகப் பணியாற்றிய சாா்பு ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள் மற்றும் காவலா்கள் உள்ளிட்ட 14 பேருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா், நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியின்போது மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன், பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் உள்பட ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.