/

பெரம்பலூா் அருகே இளைஞா் மா்மச் சாவு

News image

மர்மச் சாவு - கோப்புப் படம்

Updated On :43 நிமிடங்கள் முன்பு

பெரம்பலூா் அருகே மா்மமான முறையில் சனிக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக, மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த தங்கராசு மகன் வெங்கடேஷ் (25). ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவருக்கு மது அருந்தும் பழக்கும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்குச் சென்ற வெங்கடேஷ் மயங்கி கீழே விழுந்துவிட்டாராம். இதையறிந்த அவரது உறவினா்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா்.

அங்கு, மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் ஏற்கெனவே வெங்கடேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.