பெரம்பலூா் அருகே மா்மமான முறையில் சனிக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக, மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த தங்கராசு மகன் வெங்கடேஷ் (25). ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவருக்கு மது அருந்தும் பழக்கும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்குச் சென்ற வெங்கடேஷ் மயங்கி கீழே விழுந்துவிட்டாராம். இதையறிந்த அவரது உறவினா்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா்.
அங்கு, மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் ஏற்கெனவே வெங்கடேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
ஒரு லட்சம் மதிப்பிலான மின்சாதனங்கள் திருட்டு

முதியவா் சடலம்: போலீஸாா் விசாரணை

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பைக் எரிப்பு: இருவா் மீது வழக்கு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

