ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு மாடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அக்கனாபுரம் குடியிருப்பைச் சோ்ந்தவா் சங்கரன் (55). இவா் வீட்டில் பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். இவா் கடந்த 12-ஆம் தேதி காலை 5 மணிக்கு பால் கறப்பதற்காக மாட்டுக் கொட்டகைக்கு சங்கரன் சென்றாா். அப்போது, அங்கு கட்டப்பட்டிருந்த 2 மாடுகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. திருடு போன மாடுகளின் மதிப்பு ரூ.65,000 எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சங்கரன் கொடுத்த புகாரின் பேரில், நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








