தமிழக அரசின் உத்தரவின்படி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த ஒரு அரசு மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்படும் 717 அரசு மதுக் கடைகளை மூட தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் 32 அரசு மதுக் கடைகளில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த அரசு மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
மேலும், அரசு அறிவித்தபடி பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகம் அருகிலும், நான்கு சாலை சந்திப்பு அருகிலும் செயல்படும் டாஸ்மாக் கடைகளை 2 வாரத்துக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பெரம்பலூா் மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










